Dravidian comparisons with Jew and TamizhBrahmin
Are Tamizh Brahmins Aryans? Jews? Yes they are Jews (Periyar 1938)
பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே!
– ஒரு சந்தேகி
பார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது?
எதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது?
யூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் ” எல் ” என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா?
இயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா? பழய ஏற்பாட்டின்படி ” ஜெஹோவா” பிரதானமான ஒரே கடவுளல்லவா?
இந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனக்காரர்களான பார்ப்பனர் யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா?
எருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது.
பாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்?
யூதர்களின் ஜிஹோவா இந்துக்களின் சிவா என மறுவி இருக்கலாமல்லவா?
எல் என்ற எபிரேய பதம் வேல் என்று மறுவி இருக்காதா? யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுப்பாகு ஏற்பட்டதாகாதா? பிள்ளையார் கோவிலுள்ள நாகம் அரசமரம் வேம்பு முதலியவற்றிற்கும் முறையே ஏதன் சர்ப்பத்திற்கும் தேவதாரு மரத்துக்கும் நன்மை தீமை அறியும் மரத்துக்கும் ஒற்றுமை இல்லையா?
இவ்வொற்றுமைகள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?
யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம். யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிர்ப்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்களுக்கு குடியிருக்க குறிப்பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையா?
யூதர்கள் தங்கள் சுகந்தேடுவதும் எப்படியாவது சரீரப்பாடுபடாமல் பொருள் தேடியலைவதுமான குணம் கொண்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலமும் எப்படியாவது பாடுபடாமல் பொருள்தேடி அலைகிறவர்கள் என்பதற்கும் பொருத்தம் சரியாக இல்லையா?
யூதர்கள் சிறிதும் தங்களை தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்துக்கொண்டு ஆளுவதில் கலந்துக்கொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாளுகிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்து கொண்டு ஆசயில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறவர்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா?
யூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்தறிவுக்கு முரணான கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புறாணங்களும் அவர்களது சித்தாந்தங்களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா?
யூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும் மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேரியவர்கள் போலவே பார்ப்பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா?
வடிவத்திலும் நிரத்திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா?
இந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத்தமாக இல்லையா?
ஆகவே இப்பொருத்தங்களை சரியானபடி கவனித்து ஆறாய்ச்சி செய்து பார்த்து பார்ப்பனர்கள் யூதர்களா அல்லவா என்பதை தெரிவிக்கும்படி ஆராய்ச்சி ஆளர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
—————— பெரியார் அவர்கள் சந்தேகி என்ற பெயரில் எழுதிய கட்டுரை – ”குடி அரசு” – 20.03.1938
True worth of Aryans (Periyar 1938)
ஜர்மனியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளு கிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்.
இந்து மத ஆதாரங்களும் ஆரிய மதம், ஆரிய வேதம், ஆரியக் கடவுள்கள், ஆரிய மன்னர்களின் கதைகள் என்பதாகத்தான் இருந்து வருகின்றன.
புராண ஆராய்ச்சிக்காரர்களும், பண்டிதர்களும், சரித்திர ஆராய்ச்சிக் காரர்களும், பாரதம், ராமாயணம் மற்ற புராதனக் கதைகள் ஆகியவைகளில் வரும் சுரர், அசுரர் என்கின்ற பெயர்களையும், ராக்ஷதர்கள் தேவர்கள் என்கின்ற பெயர்களையும், ராமன் அனுமான் என்கின்ற பெயர்களையும், ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவையே பிரதானமாய்க் கொண்டவை என்பதாகவும் தீர்மானித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். மேல்நாட்டுச் சரித்திரக்காரர்களும், சிறப்பாக அரசாங்கத்தார்களும் மேல்கண்ட ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை ஒப்புக்கொண்டு அந்தப்படியே ஆதாரங்கள் ஏற்படுத்தி பள்ளிப் பாடமாகவும் வைத்து வந்திருக்கிறார்கள்.
அரசியல்காரர்களில் தீவிர கொள்கை கொண்ட தேசீயவாதிகள், சமதர்மக்காரர்கள், பொதுவுடமைக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற தோழர் ஜவகர்லால் நேரு போன்றவர்களும் தங்களது ஆராய்ச்சிகளில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவுகளை ஒப்புக்கொண்டும் சரித்திரங்களில் இருந்துவரும் ஆரியர் திராவிடர் பிரிவுகளை ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆரியர்களின் தத்துவம் எப்படி இருக்கிறதென்றால் இந்தியா அவர்களுடைய பூர்வீக நாடு என்று சொல்லுவதற்கில்லாமல் இருப்பதோடு இந்தியாவில் ஆரியர்களுக்கு உள்ள சம்மந்தம் கேவலம் ஐரோப்பாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும், அரேபியாவிலும், பர்சியாவிலும் இருந்து வந்து குடியேறின ஐரோப்பியர், முகமதியர்கள், பார்சியர்கள் ஆகியவர்களுக்கு இருந்து வரும் பொறுப்பும், உரிமையும், மனிதாபிமானமும் கூட இல்லாதவர்கள் என்று சொல்லும்படியான நிலையில்தான் இருந்து வருகிறார்கள்.
உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் ஜர்மனியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டு ஜர்மனி தேசத்திலுள்ள யூதர்களுக்கு ஜர்மனியில் இருக்க உரிமையில்லை என்று சொல்லி விரட்டியடிக்கும் தன்மை போலத்தான் இந்தியாவில் உள்ள மக்கள் ஆரியர்களை விரட்டி யடிக்கப்படவேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.
ஜர்மனியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்குச் சொல்லும் காரணங்கள் இந்தியர் ஆரியர்களை விரட்டியடிக்கலாம் என்பதற்கு பொருத்தமானதாகவே இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அதாவது ஜர்மனியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லுகிறார்கள்.
அவைகளில் ஒன்று, யூதர்கள் தங்களுக்கு என்று தேசமில்லாதவர்கள் என்றும், தேசமில்லாத (அதாவது ஜிப்ஸிமலை சாதியார்லம்பாடிகள் கூடாரத்தோடு திரிகிறவர்கள் போன்றவர்கள்) என்றும் அப்படிப்பட்டவர்களை ஒரு நாட்டில் வாழவிட்டால் அவர்கள் அந்த நாட்டின் வளப்பத்தையும் முற்போக்கையும் காட்டிக்கொடுத்து ஜீவிக்கிறவர்களாகிவிடுவார்கள் என்பது.
இரண்டாவது, யூதர்கள் சரீரத்தில் பாடுபடமாட்டாதவர்கள்.
சரீரத்தினால் பாடுபடாதவர்கள் ஊரார் உழைப்பைக் கொள்ளை கொண்டு வாழுபவர்களாவார்கள் என்றும், ஊரார் உழைப்பால் வாழுகின்றவர்கள் மனித சமூகத்துக்கு க்ஷயரோகம் போன்ற வியாதிக்கு சமமானவர்கள் என்பதோடு தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்கு ஆக நாட்டையும் மனித சமூகத்தையும் பிரிவிணையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக்கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிக்க குறைந்த விலைக்கும் எதையும் காட்டிக்கொடுப்பார்கள் என்பதாகும்.
இந்த இரண்டு காரணங்களும் இன்று நம்நாட்டில் ஆரியர் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களாதியோரிடம் இருந்துவருகின்றன.
முதலாவது ஆரியர்களுக்கு இன்னதேசம் என்பதாகவே ஒன்று இல்லை என்பதோடு, ஆரியர்கள் என்பவர்கள் சரீரத்தினால்பாடுபடாமல் மதம், புரோகிதம் ஜாதி உயர்வு, அரசியல் உத்தியோகம், தேசியத் தலைமை என்கின்றதான சூக்ஷித் தொழில்களால் சிறிதும் சரீரப்பாடுபடாமல் மற்ற ஆரியரல்லாத மக்கள் உழைப்பினாலேயே வஞ்சக ஜீவியம் நடத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். இவர்களுக்கு தங்கள் வாழ்க்கை தங்கள் ஆதிக்கம் என்பதல்லாமல் மற்றபடி எந்த தேசத்தைப்பற்றியோ எவ்வித ஒழுக்கத்தைப் பற்றியோ எந்த சமூகத்தைப்பற்றியோ சிறிதும் கவலை இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.
இந்தக் காரணத்தாலேயே நமது பழைய ஆதாரங்கள், அகராதிகள் ஆகியவற்றில் ஆரியர்கள் என்றால் மிலேச்சர்கள் என்றும், ஒருவிதக் களைக்கூத்தர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதற்கேற்பவே ஆரியர்கள் இந்த நாட்டில் என்று காலடி வைத்தார்களோ அன்று முதல் இன்று வரை பலவித வஞ்சகங்களாலும், சூழ்ச்சிகளாலும் ஏமாற்றி அவர்களை சின்னாபின்னமாகப் பிரித்து ஆபாசக் கற்பனைகளையும் நடத்தைகளையும் வேதமாகவும் மோக்ஷ சாதனமாகவும் ஆக்கி இந்நாட்டு மக்களுக்கு அவர்களே ஆதிக்கக்காரர்களாகவும் “இகம்” “பரம்” இரண்டிற்கும் தர்மகர்த்தாக்களாகவும், சமுதாயம் அரசியல் இரண்டிற்கும் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், எஜமானர்களாகவும்கூட தங்களை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இவர்களது தர்மகர்த்தாத் தன்மையிலும், எஜமானத் தன்மையிலும், வழிகாட்டித் தன்மையிலும் இந்நாட்டுக்கு எந்தத் துறையிலாவது ஏதாவது கடுகளவு முற்போக்கோ, நன்மையோ ஏற்பட்டிருக்கின்றனவென்று யாராவது சொல்லமுடியுமா என்றுபார்த்தால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவுக்கோ, இந்திய நாட்டு பழம் பெரும் குடி மக்களுக்கோ ஏதாவது ஒரு நன்மை சிறிதளவாவது ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப் படுமானால், அவற்றில் சிறிது முஸ்லீம் அரசர்களாலும், பெரும்பாலும் ஐரோப்பிய ஆக்ஷியிலும் ஏற்பட்டதென்றே சொல்லலாம்.
அதுவும் ஆரியர்களின் முட்டுக்கட்டையையும், தொல்லையையும் சமாளித்து ஏற்பட்டவைகள் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய மற்றப்படி ஆரியர்கள் முயற்சியோ, உதவியோ ஒரு சிறிதாவது கொண்டு ஏற்பட்ட தென்று எதையும் சொல்லமுடியாது.
மேலும் இன்று அரசியல், சமூக இயல், பொருளியல், அறிவியல் ஆகிய நான்கு துறைகளிலும் இந்நாட்டு மக்கள் அடைந்திருக்கும் ஈன நிலைக்கு இந்த ஆரியர்களே காரணமென்று சொன்னால் அதுவும் மிகையாகாது.
ஆகையால் தேசமில்லாதவர்களும், தேக உழைப்பு இல்லாதவர்களுமான சமூகம் எந்த நாட்டிற்கும் கேடு விளைவிக்கக்கூடியது என்பதோடு முக்கியமாக இந்தியாவுக்கு அது ஒரு பெருங்கேட்டையே விளைவித்துக் கொண்டிருப்பதாகவே இருந்து வருகிறது.
இதை நமது பாமர மக்கள் உணராமல் ஏமாந்து போய் தங்களுக்குத் தாங்களே கேட்டை விளைவித்துக் கொள்ளுகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்நாட்டு ஆரியரல்லாத மக்களில் படித்தவர்களாயும், விஷயமறிந்தவர்களாயுமுள்ள ஒரு கூட்ட மக்கள் இவ்வாரியர்களுக்கு உள் ஆளாயிருந்து சமூகத்தையே அடியோடு காட்டிக்கொடுத்தும் கெடுத்தும் தாங்கள் வாழ முயற்சிக்கும் இழிநிலையை உணரும்போது ஆரிய சுபாவம் இவர்களது ரத்தத்தில் எப்படி ஊறியது என்று ஆச்சரியப்படவேண்டி இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
————– பெரியார் – “குடி அரசு” துணைத் தலையங்கம் 05.01.1936
Tamizh Brahmins and Jews – (Arignar Anna 1938)
விஞ்ஞான வளர்ச்சி தேவையென நாம் கூறினால் மின்சாரத்தில் ஆண்டவன் ஜோதி தரிசனம் காணலாம் என்றார் ஆச்சாரியார். புதுக்கருத்துக்களைக் கற்றுணர் என நாம் போதித்தோம். துளசிதாசரின் இராமாயணத்தைப் படித்து ரசிக்கச் சொல்கிறார்கள். பகுத்தறிவிற்காக நாம் பாடுபடுகிறோம். கட்டளைகளை மீறாதே, அலசாதே, வாய் பொத்தி, கை கட்டி, நின்று பணியாற்று என்கிறார் – காங்கிரஸ் சூத்திரதாரி. ஜாதி வித்தியாசத்தைத் தவிடு பொடியாக்க வேண்டுமென நாம் கூறுகிறோம். சேரிக்கு ஒரு நாள் சென்று எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு புதிய அடிமைப்பட்டம் சூட்டினால் போதுமே என்கிறார்கள்.
பண்டைப் பெருமைகளை எடுத்துக்காட்டி எளிய வாழ்க்கையே மேலென உபதேசம் செய்து மக்களை வறுமையிலேயே விட்டு விடுகிறார்கள். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நாம் முன்னேற்றம் வேண்டுகின்றோம். அவர் ஆதி காலத்துக்கு நம்மை அழைக்கிறார். சாதாரணமாக அழைக்கவில்லை, ஒரு மகாத்மாவின் பெயரைக் கூறுகிறார்கள். ஒரு தேசிய இயக்கத்தின் பெயரால் அழைக்கிறார்கள்.
எவ்வெவ்வைகளை நாம் மூடத்தனமென விளக்கிக் காட்டிக் குப்பையில் வீசி எறிந்தோமோ அவைகள் எல்லாம் புதிய மெருகிடப்பட்டு விலையாகின்றன. இதனை நாம் தடுக்காவிடில் பலனைத் தமிழர் இழந்துவிடுவர்.
ஆகவே நாம் அரசியலின் பேரால் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தையும், மூட நம்பிக்கையையும் எதிர்த்து முன்னிலும் அதிக பலமாகக் கட்டுப்பாடாக முறையுடன் வீரத்துடன் உண்மைத் தமிழன் என்ற உணர்ச்சியுடன் போரிட வேண்டியது மிக அவசியம்.
இனி நமது எதிர்காலப் போராட்டத்தின் அவசியத்திலே யாருக்கும் அய்யம் ஏற்படாதென்றே நான் நம்புகிறேன். நமது போராட்டத்தின் காரணத்தையும் விளக்கியுள்ளேன். அதனை உணரும் தோழர்களுக்கு நாம் எங்கிருந்து போர் புரிய வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகிறேன்.
மனுவைக் கொண்டு நம்மை அடக்கிய பார்ப்பனர் மகாத்மாவின் காங்கிரசைக் கொண்டு இன்று அடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆகவே அந்தக் காங்கிரசிடமோ, அதனுடைய நிழலில் பதுங்கி ஒதுங்கி நின்று கட்டியங் கூறி வாழும் வேறு கோஷ்டியிடமோ நாம் சேர எத்தகைய நியாயமும் கிடையாது என்றே எண்ணுகிறேன்.
தேர்தல் தோல்வி கண்டு தலைவர்கள் திடுக்கிட்டுப் போய்விடக்கூடும். போலிகள் மருண்டு விடக்கூடும். சமய சஞ்சீவிகள் கூடுவிட்டுக் கூடு பாயக்கூடும். புகழ் மாலை வேண்டுவோர் புதிய தேவதைகளைப் பூசிக்கத் தொடங்குவர். ஆதாயம் கிடைக்கப் பெறாதவர் வேறு நாயகனை அண்டிப் பிழைக்க எண்ணுவர்.
ஆனால் இயக்கத்தில் இரண்டறக் கலந்தவர் வேறு இடம் நாடார். வேறு இடங்களிலிருந்து கொடுமைகளைக் கண்டு சகியாது குமுறிக் கொண்டிருக்கும் பலரை இங்கு இழுக்கவே முற்படுவர். நாம் ஒழிக்க விரும்பும் ஆதிக்கம் சாமான்யமானது அல்ல. அந்த வகுப்பார் தமது நிலைமையைப் பாது காத்துக் கொள்ள சமூகத்தின் ஜீவநாடிகள் அவ்வளவையும் பிடித்துக் கொண்டே நம்மை ஆட்டி வைக்கின்றனர்.
ஜெர்மன் அதிகாரியான ஹெர் இட்லர் ஜெர்மனி தேசத்தில் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை தம் சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனர் ஆதிக்கம் இருந்து வருவதனால் விளையும் சமூகக் கேட்டையும் நன்கு உணர்வர்.
பெரிய தொழிற்சாலைகளெல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வகலாசாலைகளில் யூதர்களே கலா மண்டபங்கள். அவர்கள் கரங்களிலே புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. மந்திரி சபை அவர்கள் கைப்பாவை. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது.
செல்வம் அவர்களிடம், வறுமை ஜெர்மனியரிடம், ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம்.
ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தமது சுயசரிதையில் எழுதினார்; எழுதியபடி செய்தும் முடித்தார். எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஏதாவதொரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு மற்றைய வகுப்பினரை அடிமைப்படுத்தி சமூகத்திலே பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிக்கத்தை ஒழிக்க மற்றைய வகுப்பினர் ஒன்று கூடிப் புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை.
—————- அறிஞர்அண்ணா – “குடி அரசு” – 29-8-1937